Latest Post

மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம். அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சி: மற்றுமொரு எண்ணெய் கப்பலை அழித்தது ஈரான்! ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் – சவூதி தூதர். யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுவதற்கு பிரார்த்திப்போம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…)

இஸ்லாமிய தீவிரவாத  சக்திகளை தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும் என ஞானசார தேரர் அழைப்பு.!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலில் இறந்தவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் நீதி கிடைக்கவும், இந்த நாட்டில் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவும் நாம் ஒன்றுபட வேண்டும் என்று…

பிள்ளையானுக்காக நாமல் கவலையடையும் காரணம் காலப்போக்கில் வெளிவரும்- நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு..!

முன்னால் இராஜங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துறை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள…

🔴𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀
குச்சவெளி – சாகரபுர பகுதியில் புல்மோட்டை தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கில் விபத்து!!

இன்று 2025-April-21,
03:25 PM மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருமலை நோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் சலப்பையாறு – கும்புறுப்பிட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய “கிருபாகரன் உஷாந்தன்” ஆவார்.

மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு!!

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில்…

இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிபயட்டை 82 வயது மூதாட்டி ஒருவர் தொடர்ந்து கற்றுக் கொடுத்து வருகிறார்!

பண்டைய இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டுவை கற்பிக்கும் 82 வயது பெண்மணி ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறுகிறார். “நான் இறக்கும் வரை களரி பயிற்சி…

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி தெரிவிப்பு..!
————————————————————————

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

2019 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரையிலான ஐந்தரை ஆண்டுகள் விசாரணைகள் என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கோ 2019 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கோ இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்கொண்டுவருவதற்கான நோக்கம் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த அரசாங்கங்களுக்கு உண்மையான சூத்திரதாரிகளை மறைக்க வேண்டிய தேவையே காணப்பட்டதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.

தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாங்கள் வெற்றிபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு   பணம் கொடுக்க மாட்டோம் என்று நான் சொல்லவில்லை, என ஜனாதிபதி தெரிவிப்பு..!
—————————————————————–

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தாம் வெளியிட்ட கருத்து எதிர்க்கட்சிகளால் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றிபெறாத உள்ளூராட்ச்சி உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்படாது என தாம் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மத்திய அரசு கவனமாக சேகரித்த நிதியை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க மாட்டோம் என்று மட்டுமே கூறியதாகவும், NPP கட்டுப்பாட்டில் உள்ள மன்றங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படும் என கூறவில்லை எனவும் விளக்கினார்.

“உள்நாட்டு வருமானத் திணைக்களத்துடனான தினசரி கூட்டங்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நெருக்கமான கண்காணிப்பு மூலம், கருவூலத்தில் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கவனமாக சேகரிக்கப்பட்ட பணத்தை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க முடியாது. நுவரெலியா நகர சபையில் ஒரு குழு ஊழல் செய்தால், அவர்களுக்கு இந்த நிதியை ஏன் வழங்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பது போல, உள்ளூராட்சி மன்றங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“மத்திய அரசு திருடாமல் இருக்கும்போது, உள்ளூராட்சி மன்றங்கள் திருடினால் என்னவாகும்? மத்திய அரசு வீண் விரயத்தை தவிர்க்கும்போது, பிரதேச சபைகள் பணத்தை விரயம் செய்கின்றன. மத்திய அரசு தனது கடமைகளை செய்யும்போது, உள்ளூராட்சி மன்றங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. மக்களின் பணத்தை இத்தகைய அமைப்புகளுக்கு தெரிந்தே ஏன் வழங்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு கவனமாக சேகரித்த மக்களின் பணத்தை, பிரதேச சபைகள் அல்லது நகர சபைகள் தவறாக பயன்படுத்துவதற்கு வழங்கப்பட மாட்டாது என்று தனது கருத்து தெளிவாக உள்ளதாக ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

மட்டு – சந்திவெளியில் விபத்து : திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் பலி..!

நேற்று (18) மாலை 5 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து சம்பவித்திருக்கிறது. இவ்விபத்தின்…

வருடத்தின்  இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர்..

685 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன. இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த…

கிறீஸ் மரம் ஏறும்போது 40 அடி உயரத்திலிருந்து விழுந்து
16 வயது மாணவன் பரிதாப மரணம்!

எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் போது, கிறீஸ் மரம் ஏறும் போட்டியில் பங்கேற்ற 16 வயது மாணவர் ஒருவர் சுமார் 40 அடி உயர கிறீஸ் பூசப்பட்ட மரத்தில் இருந்து சறுக்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் எல்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

GCE O/L பரீட்சை எழுதிவிட்டு அடுத்தவாரம் வெளியாக இருக்கும் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவர் ஒருவருக்கே இந்த அனர்த்தம் நிகழ்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு..!

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் திருகோணமலை – புத்தளம் ஏ12 பிரதான வீதியின் கன்னியா…

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது…!

அதிக கட்டணங்கள் அறவிடப்பட்டமை, பயணிகளை தரம் குறைவாக நடத்தியமை, அதிக வேகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பான விசாரணகளையும்…

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து!!
———————————————
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது. நாம் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க முடியாது, இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளில் ஒன்று வேலை இழப்பு.”

பலர் இது ஒரு மில்லியன் என்று கூறுகிறார்கள். அது ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை பெரியதாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்… தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள்… இது அனைவரின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது.

நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது. எனவே, நாம் கடன் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே, இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி விவாதிக்கவும்.

உள்ளூர் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? எனவே, இதை ஒரு அவசரநிலையாகக் கருதி, அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்து நாட்டிற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். “இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால், ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களினால் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் சுய தொழில் முயற்சியாளர்களின் “பாடுமீன் சந்தை” விற்பனைக் கண்காட்சி…

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.

சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்திற்கான பணி ஆரம்பித்து வைப்பு!!

இந்தியாவின் என்டீபீசீ (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் நிலையம்,…

திருமலையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

திருகோணமலை – சம்பூர் பகுதியில் அரச பொறி முறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று…

தெஹிவளையில் உள்ள மசூதியை மூடுவது தொடர்பாக UDA உடனான 10 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது!

இன்று (04) முன்னதாக, தெஹிவளையில் அமைந்துள்ள பாத்தியா மாவத்தை மசூதியை இடிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக, கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர மேம்பாட்டு ஆணையம்…