திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை
அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு “பிளேட்டால்” கழுத்தில் வெட்டியதில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிவடைந்து வெளியே வரும்போது இருவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட “காதல் பிரச்சனையில்” நடந்ததென முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply