இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலுள்ள மொழித்துறையின் (Department of Languages) பதில் தலைவராகப் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
மொழித்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவர், மாணவர்களின் கல்வி மேம்பாடு, புதிய பாடத்திட்ட அறிமுகங்கள் மற்றும் பீடத்தின் வளர்ச்சிப் பணிகளில் முன்னின்று செயற்படவுள்ளார்.
இவரது நியமனத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினர், மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் எனப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கலை கலாசார பீடாதிபதி ஆகியோரின் வழிகாட்டலில், பேராசிரியர் அஷ்ரஃப் அவர்களின் தலைமையில் மொழித்துறை ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என எதிர்பார்க்கலாம்.
