கூகுள் பே செயலி வாயிலாகப் பணம் அனுப்புவது பாதுகாப்பானதா என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தைப் போடுவதும் எடுப்பதும் வாடிக்கையாளர்களுக்குச் சிரமமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் பரிவர்த்தனை முறையை வங்கிகள் அறிமுகப்படுத்தின. ஏடிஎம், மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், ஆன்லைன் பரிவர்த்தனை போன்ற சேவைகள் வங்கி வாடிக்கையாளர்களிடையே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் மொபைல் செயலிகள் வாயிலாகப் பணம் அனுப்பும் வசதி வந்தபிறகு வாடிக்கையாளர்களுக்கு இன்னும் இலகுவாக இருந்தது.

அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாகப் பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு அனுப்ப முடிந்தது. இதுமட்டுமல்லாமல், ரீசார்ஜ், மின் கட்டணம் உள்ளிட்ட மற்ற வசதிகளுக்கும் மொபைல் ஆப்களை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுத்தத் தொடங்கினர். இதனால் வங்கிச் சேவைகளை விட மொபைல்போன் வாயிலான பரிவர்த்தனைகளே அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மக்களிடையே இன்னமும் நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. அனுப்பும் பணம் சென்று சேருமா சேராது என்ற சந்தேகம் பலரிடம் இருக்கிறது.

By Admin

Leave a Reply

You missed