Screenshot

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி மேதகு ஜே.டி. வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தனர். இந்தக் குழுவில் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களை பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான செனட்டர் முகமது இஷாக் தார், பாதுகாப்புப் படைகளின் தலைவர் மற்றும் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் மற்றும் உள்துறை அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதில் அமெரிக்கா கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாகிஸ்தான் தரப்பு, இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மோதல்களுக்கு நிரந்தரத் தீர்வுகாண பாகிஸ்தான் தொடர்ந்து ஒத்துழைக்கும் என துணைப் பிரதமர் உறுதியளித்தார்.

By Admin