முன்னால் இராஜங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துறை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பாக விசாரணைக் குழு உரிய முறையில் விசாரணை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை மாத்திரம் தங்களது தரப்பு வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணைகளை தொடர்ந்து சட்டமா அதிபரினால் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும்.

இதனையடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்

By JF

Leave a Reply