குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதியமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு கடந்த திங்கட்கிழமை (19) முன்வைக்கப்பட்டதுடன்.

பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட செயலாளர், குச்சவெளி பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளுடன் நேற்றைய தினம் (26) கச்சேரியின் கேட்போர்கூடத்தில் குச்சவெளி மக்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது திரியாய் பகுதியில் பௌத்த பிக்குவால் மக்களுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடையம், வளத்தாமலை ஆலயத்தின் வழிபாடு, பூஜாபூமி என்ற பெயரில் திரியாய், புல்மோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள விடயம்,  இலந்தைக்குளம் பகுதியின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்நிலையில் ஒருசில விடயங்களுக்கு உடனடி தீர்வு எட்டப்பட்டுள்ளதுடன், சில விடையங்களை உடனடியாக மேற்கொள்ள குச்சவெளி பிரதேச செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய காணி தொடர்பான நடமாடும் சேவை ஒன்றினை விரைவில் ஏற்பாடு செய்து சில விடயங்களுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதைவிட கட்டம் கட்டமாக தீர்வு எட்டப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அவற்றை பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்வுகளை எட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுபோன்ற கலந்துரையாடல்கள் எதிர்காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

Leave a Reply