இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம் செய்யப்படும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.நிமலசிறி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த இடைநிறுத்தம் எதிர்வரும் 14 தினங்களுக்கு அமுலில் இருக்கும். மேலும் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

You missed